Monday 16 July 2012

உப்பும் உறைப்பும்!

என்னுடைய கடந்த சில இரவுகளை மிகுதியாத்தின்றது திரைப்படங்கள்!

பெரும்பாலும் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று மட்டுமே திரைக்காவியங்களைக்கண்டு களித்து வந்த நான் ட்விட்டரால் டோரண்ட்டுக்கு அறிமுகம்+அடிமை ஆனேன்.


அப்படி என்னை ஈர்த்த ஓரிரு மலையாளத்திரைப்படங்களைப்பற்றி சொல்லலாம் என இருக்கிறேன்.


அவற்றை நீங்கள் (ஒத்தையா இந்த பதிவை பயமில்லாம படிக்கிறவரே உங்களைத்தான்) கண்டு களித்து காறித்துப்பி விமர்சனங்களில் திளைத்திருக்கலாம் இருந்தாலும் எனக்கும் சமூக பிரஞை என ஒன்று உள்ளதல்லவா???

என் நினைவில் தூங்கும்  வண்ணச்சிதறல்களை கலைடாஸ்கோப்பும் சிறு முயற்சி மட்டுமே!!


டிஸ்கி:என்னடா எப்பவுமே செய்யுறத எல்லாத்தையும் செஞ்சுட்டு கடைசியா பாதிரியார்கிட்ட பாவமன்னிப்பு கேக்குறமாதிரிதானே எல்லோரும் இதை எழுதுவாங்க இவன் இப்பவே இதை சொல்றானேன்னு நினைக்காதீங்க இது சிகரெட் அட்டையில் எழுதுவதைப்போல ஒரு பம்மாத்து எச்சரிக்கை அதாகப்பட்டது" நான் எதையும் அலட்சியத்துடன் அசட்டையுடன் அசிரத்தையுடன் கடப்பவன் எனவே டெக்னிக்கலாக அதிகமாக எதிர்பார்த்திட வேண்டாம்"

பின்ன என்ன ஹேருக்கு எழுதுறேன்னு திட்டக்கூடாது 
மீ பாவம் ஜஸ்ட் ஃபார் ஜட்டி....

SALT N PEPPER முதலில் இதைப்பற்றி


இளமையை விட்டு விலகியும் முதுமை தொட்டுவிடாமல் அவதியுறும் மத்திமவயது காதல்தான் களம்!

உணவு ! அண்ணாச்சி இது ஆசையில்ல பசின்னு பசித்தவன் சொல்லுவான்! இதையே ஆசையாகக் கொண்டு உயிர்தரித்திருப்பவன் நம் நாயகன்! உணவுப்பிரியன்!பெண் பார்க்கச்சென்ற இடத்தில் அதைவிட்டு அங்குள்ள அருமையான சமையல்காரனை வேலைக்கு அமர்த்திக்கொண்டு அழைத்துச்செல்லும் அளவு சமையல்கலையின் உன்னத ரசிகன்!!நாமும் நல்ல ருசி எது வக்கனையாக அலைந்து திரிந்து நாக்கை திருப்தி படுத்துவதில்லையா?! அதில் இவன் தீவிரவாதி! அது என்னவோ முதல் காட்சியில் புளியம்பழத்தைத்தின்னும்போது எல்லோரையும் போல எனக்கும் நாவில் ஊறியது எச்சில் ஏக்கத்தோடு!


நாயகி முதிர்கன்னி,டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நாயகன் அளவு இல்லையென்றாலும் உணவுக்கு நல்லதொரு ரசிகை!

ஒரு ராங் கால் ,ஒரு தோசை(thattil kutti dosai) இவைதான் இருவரையும் சண்டையோடு அறிமுகப்படுத்தி வைக்கின்றன.சிறுதயக்கம் தடுமாற்றங்களுக்குப்பின் தொடரும் அலைபேசி உரையாடல்கள் தோழமைக்கான கண்ணிகளைக்கோர்க்கின்றன.

மறுபடியும் இவ்வுரையாடல்களின்போது "Joan's Rainbow" கேக் செய்முறை நாக்கை சப்புக்கொட்ட வைக்கிறது.

பிறகு வழமை போல நேரில் காண விழைதல்,ஏதோவொரு தயக்கத்தில் இருவரும் செல்லாமல் இளையவர்களை ஆள்மாற்றி அனுப்புதல்,அவர்களுக்குள் காதல் கிளைவிடுதல் என நம்மை இட்டுசெல்கிறது படம்.பிறகு இறுதிக்காட்சியில் உண்மை உடைபடுவதும் இரு ஜோடிகள் இணைவதும் எல்லாம் வழக்கம் போலவே!!!

நேரில் சந்திக்காமல் பரிதவிக்கும் காட்சிகள் சொல்கின்றன காதல் எவ்வயதில் வந்தாலும் காதல்தான்.

படத்தில் என்னை ஈர்த்தவை ...

தன் பழைய காதலிக்காக தன் தொல்லியில் அகழ்வாராய்ச்சி இடத்தை அவர் செல்லும் இடத்துக்கெல்லாம் மாற்றிச்செல்லும் நாயகனின் சக அலுவலர்!

சமையலோடு தோழமையும் பரிமாறும் சமையல்காரர்!

மத்திம வயது அவஸ்தைகளை எரிச்சலை வெளிப்படுத்திய நாயகன்,நாயகி!

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 
.
.
.
.
.
.
.
.




அடுத்து "ஆதாமின்ட மகன் அபு"

பயம் வேண்டாம் அடுத்த பதிவில்தான்

No comments:

Post a Comment