Tuesday 3 May 2011

மன்மோகன் பரபரப்பு அறிக்கை:behind the scene...



 " ஊழலை ஒழிப்போம்..சி.பி.ஐ. அச்சமின்றி செயல்படவேண்டும்."
இந்த பரபரப்பான அறிக்கையை வெளியிட்டு இந்தியாவையே ஸ்தம்பிக்கவைத்தார் நம்ம பிரதமர்.

இவருக்குள்ளயும் என்னவோ இருக்கு போலன்னு எல்லாரும் ஆடிப்போய்ட்டாங்க..

அதுக்கு அடுத்த நாள்..

  மன்மோகன்சிங் அன்னை சோனியாவின் வீட்டில்..

சோனியா:mr.சிங்..அந்தளவு தைரியம் யாரு கொடுத்தாங்க உங்களுக்கு.. ஊழலை ஒழிப்போம்னு கோஷம் போட்டீங்களாமே?
                   காங்கிரஸை அத்தனை சீக்கிரம் ஒழிச்சிடலாம்னு பாக்குறீங்களா
சிங்: (ராகுலும் எவ்வளவோ முயற்சிக்கிறாரு இப்போதுதான் பீஹார்,உ.பி.,தமிழ் நாடு,,வரிசையா ஆரம்பிச்சிருக்கு)
       இல்ல ஜீ ஏதோ புத்திகெட்டு பேசிட்டேன்..பேட்டா ல கை வச்சிராதீங்க
சோனியா:பயப்படக்கூடாதுன்னு வேற சொன்னீங்க்ளாமே
சிங்:(பயத்துல என்ன பேசறேன்னு தெரியாம ஒரு flow ல வந்திருச்சு..என்னமோ மைக்க பாத்தவுடனே பொய்யா வருது)
       நீங்க பயப்படாத மாதிரியே நடிக்க சொன்னீங்களே..அதான் ஜீ
சோனியா:சரி சரி இதுவே கடைசியா இருக்கட்டும்..யார் எந்த கேள்வி கேட்டாலும் அந்த சீட்டுல என்ன எழுதியிருக்கோ
                  அதை மட்டும் படிங்க போதும்
சிங்:(ஏற்கனவே அதைத்தானே செய்றேன் ஒய்ஃப் கிட்ட பேசனும்னாலும் சீட்ட பாத்துதான் பேசவேண்டியிருக்கு)
      ok ஜீ

  4 நாள் கழித்து மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல்..

மாணவர்:உங்கள் மனைவி நன்றாக சமைப்பார்களாமே?
சிங்: எனக்கு எதுவும் தெரியாது..என் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை.
மாணவர்:உங்களுக்கு என்ன வயதாகிறது?
சிங்: அதை மேலிடம் முடிவு செய்யும்.

..

..

3 comments:

  1. ஹ ஹ ஹ . . . நல்ல கற்பனை . .

    ReplyDelete
  2. டாங்க்ஸூங்கோ

    ReplyDelete
  3. மாணவர்:உங்கள் மனைவி நன்றாக சமைப்பார்களாமே?
    சிங்: எனக்கு எதுவும் தெரியாது..என் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை.

    ReplyDelete